இந்தியா
முதல்வர் முக ஸ்டாலினின் முக்கிய கனவை கலைத்த 5 மாநில தேர்தல் முடிவு!
5 மாநில தேர்தல் முடிவு நேற்று வெளியான நிலையில் நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது என்பதும் பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விரைவில் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி பொது வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற முதல்வர் முக ஸ்டாலின் கனவு தகர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே 15 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பாஜக தற்போது மேலும் நான்கு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து உள்ளதால் பாஜக நிறுத்தும் வேட்பாளரே குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம், மேற்கு வங்கம், தெலுங்கான ஆகிய ஒரு சில மாநிலங்களில் உள்ள வாக்குகள் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க போதுமானதாக இல்லை என்பதால் கண்டிப்பாக பாஜக வேட்பாளர் தான் அடுத்த குடியரசுத் தலைவர் என்பது என்று கூறப்படுகிறது.
அனைத்து மாநில எம்எல்ஏக்கள் ராஜ்யசபா எம்பி க்கள் மக்களவை எம்பிகள் ஆகியோர்களின் வாக்குகள் மட்டுமே குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும் என்பதால் பாஜக நிறுத்தும் வேட்பாளர் தான் குடியரசுத் தலைவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே பாஜகவுக்கு எதிராக ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவரை குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கனவு தகர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.