Connect with us

இந்தியா

குஜராத் தேர்தல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 81 பேர் வரிசையாக வாக்களித்த அதிசயம்

Published

on

குஜராத் மாநிலத்தில் முதல் கட்ட சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் இன்றைய வாக்குப்பதிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 81 பேர் வரிசையாக நின்று வாக்களித்து சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய இரண்டு நாட்களில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் முதலாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில் குஜராத் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாகவும் இந்த முறை வாக்கு சதவீதம் அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திருமணமான அடுத்த சில நாட்களிலேயே தனிக்குடித்தனம் செல்லும் காலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 81 பேர் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் அவர்கள் ஒரே நேரத்தில் வாக்கு பதிவு செய்ய வாக்குச்சாவடிக்கு வந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத் மாநிலத்திலுள்ள காம்ரேஜ் என்ற பகுதியில் வசிக்கும் இந்த குடும்பத்தை சேர்ந்த 81 பேர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக பல வாகனங்களில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து விட்டு வீடு திரும்பி இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

இதில் 82 வயதில் சோலங்கி என்பவரும் முதல் முதல் முறையாக வாக்களிக்கும் இரண்டு இளைஞர்கள் உள்ளனர் என்பதும் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே நாங்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 81 பேர் ஒரே நேரத்தில் வந்து வாக்களித்து இருக்கின்றோம் என்றும் இந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் எங்கள் குடும்பத்தில் மொத்தம் 96 பேர் இருக்கிறார்கள் என்றும் ஆனால் 15 பேர் வேறு வேறு மாநிலங்களில் வசிப்பதால் அவர்களால் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?