தமிழ்நாடு
10 வயது மகனுக்கு விஷம் கொடுத்த தாய்: மகன் செய்த காரியம் என்ன தெரியுமா?
பத்து வயது மகனுக்கு பெற்ற தாயே விஷம் கொடுத்த நிலையில் அந்த மகன் விஷத்தை குடித்துவிட்டு சென்ற காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அம்பத்தூர் பகுதியில் 32-வது பெண் லதா என்பவர் தனது கணவனை பிரிந்து விவாகரத்து பெற்று, 10 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் திடீரென நேற்று காலை 6.30 மணி அளவில் தனது மகனுக்கு விஷம் கொடுத்தார். அதன் பிறகு தானும் தற்கொலை செய்ய முடிவு செய்து விஷம் குடித்தார்.
தாய் கொடுத்தது விஷம் என்று அறியாத லதாவின் மகன் தவஞ்ச் குமார், அதன்பின்னர் ஏதோ தவறு நடந்துள்ளது என்பதை அறிந்து கொண்டு உடனடியாக செல்போன் மூலம் உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் செய்தி அனுப்பி உதவி கேட்டார்.
உடனடியாக உறவினர்கள் வீட்டின் உள்ளே வந்து பார்த்தபோது, லதா மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பதும், உயிருக்காக தவஞ்ச் குமார் போராடியதும் தெரிய வந்தது. இதனையடுத்து தவஞ்ச் குமாரைஅருகில் உள்ள மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தவஞ்ச் குமாரும் இறந்துவிட்டார் .
விஷம் குடித்த உடனே சுதாரித்துக்கொண்ட மகன் தன்னை காப்பாற்றும்படி உறவினர்களிடம் கெஞ்சிய போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் லதா தற்கொலை முடிவை எடுக்க என்ன காரணம் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.