Connect with us

தமிழ்நாடு

ஔவையார், பாரதியாரை மேற்கோளிட்டு ஆவேச உரை; பின்னர் எடப்பாடியாருடன் நடந்த சீக்ரெட் சந்திப்பு – மோடி வருகையும் நடந்ததும்..!

Published

on

இன்று சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஔவையார் மற்றும் பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டி ஆவேசமாக பேசினார். பின்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தனியாக சந்தித்து கூட்டணி குறித்தும் எதிர் வரும் சட்டமன்றத் தேர்தல் குறித்தும் கலந்துரையாடியுள்ளார் பிரதமர் மோடி. 

இன்று காலை 10:30 மணி அளவில் புது டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார் மோடி. பின்னர் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்குப் பக்கத்தில் இருக்கும் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் 4 ஆயிரத்து 486 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் துவக்கி வைத்தார். மிகக் குறிப்பாக சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரயில் சேவையும், சென்னை கடற்கரை – அத்திப்பட்டு இடையிலான நான்காவது ரயில் பாதையில் ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘வணக்கம் சென்னை’, ‘வணக்கம் தமிழ்நாடு’ எனக் கூறி உரையைத் தொடங்கினார். மேலும் அவர் ஔவையார் மற்றும் பாரதியார் பாடல்களை மேற்கோள்காட்டி உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து அவர், ‘சென்னை மக்கள் எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி கொடுக்கிறது. இன்று ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் தமிழகத்தின் நீண்ட நாள் வளர்ச்சிக்கு உதவும். 

விவசாய விளை பொருள் உற்பத்தியில் சாதனை படைத்த தமிழக விவசாயிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீர் ஆதாரங்களை தமிழக விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.  கொரோனா காலத்திலும் திட்டமிட்டப்படி மெட்ரோ வேலைகள் முடிக்கப்பட்டுள்ளன’ என்றார். 

தொடர்ந்து அவர் மேடையிலேயே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது கைகளைப் பிடித்து உயர்த்திக் காட்டினார். வரும் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வைத்து களமிறங்கும் நிலையில், கூட்டணிக்குள் நிலவும் சலசலப்புகளைப் போக்கவே பிரதமர் மோடி இப்படியான காரியத்தைச் செய்தார் என சொல்லப்படுகிறது. 

நிகழ்ச்சி முடிந்த பின்னர் முதல்வர் பழனிசாமியோடு மட்டும் தனியாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் மோடி. அப்போது கூட்டணி வியூகங்கள் குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் பேசப்பட்டதாக தகவல். சில நாட்களுக்கு முன்னர் தான் சசிகலா, சிறையிலிருந்து விடுதலையாகி தமிழக அரசியலுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அவர் கூடிய விரைவில் அதிமுகவைத் தன் கட்டுக்குள் கொண்டு வர அனைத்து வித திட்டங்களையும் தீட்டி வருகிறார் என உள் வட்டாரத் தகவல். இப்படியான சூழலில் எடப்பாடியாருடன் தனியாக ஆலோசனை, ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆகிய இருவரது கைகளையும் ஒரே மேடையில் ஒன்றாக உயர்த்திப் பிடித்தது உள்ளிட்ட விஷயங்களை மோடி செய்துள்ளது, சசிகலாவை ஓரங்கட்டவே என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 

எது எப்படி இருந்தாலும் மோடியின் வருகையால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்9 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்9 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்9 மணி நேரங்கள் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: பூச நட்சத்திரத்தில் குரு பிரவேசம் – இந்த 4 ராசிகளுக்கு ஜூன் 18 முதல் பொற்காலம் தொடக்கம்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வா? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரையின் முழு விவரம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

ஒரே நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை கடக்கும் சந்திரன்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது!

vinod
சினிமா செய்திகள்6 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா4 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

சினிமா செய்திகள்6 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

வணிகம்4 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

கட்டுரைகள்3 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

Translate »
"steve represented me in both a sale and a purchase in coconut point. Heavy equipment transport bucks pa. Pontoon boat transport.