இந்தியா
மொபைல், பிராட்பேண்ட் இணைய இணைப்பு நிறுத்தப்படும்: மே.வங்க மாநில அரசு அறிவிப்பு!
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சில பகுதிகளில் மொபைல் இன்டர்நெட் மற்றும் பிராட்பேண்ட் இன்டர்நெட் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் மட்டும் இணையதள சேவைகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது மேற்கு வங்க அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் சட்ட விரோதமான செயல்கள் வரும் நாட்களில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மேற்குவங்க அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
மார்ச் 7-9, மார்ச் 11-12 மற்றும் மார்ச் 14-16 ஆகிய நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை சேவைகள் நிறுத்தப்படும் என மே.வங்க அரசு அறிவித்துள்ளது.