Connect with us

தமிழ்நாடு

20 ஆயிரம் புத்தகங்கள் வாசித்த அதிமேதாவி: அண்ணாமலை குறித்து செந்தில் பாலாஜி!

Published

on

மின் ஒப்பந்தம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்துள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி 20 ஆயிரம் புத்தகங்களை வாசித்துள்ள அதிமேதாவிக்கு புரிதல் வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

எண்ணூர் மின் திட்ட ஒப்பந்தம் தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர் .

நஷ்டத்தில் இயங்கும் பிஜிஆர் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாகவும் திமுகவிற்கு வேண்டப்பட்ட நிறுவனம் என்றும் அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த செந்தில்பாலாஜி அதிமுக ஆட்சியின்போது ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது என்றும், குற்றச்சாட்டுகளை 24 மணி நேரத்தில் நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே தனக்கு கெடு விதிக்க செந்தில் பாலாஜி யார் என அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து 13 ஆயிரத்து 700 நாட்களில் 20 ஆயிரம் புத்தகம் வாசிக்கும் அதிமேதாவிகளுக்கு புரிதல் வேண்டுமென செந்தில்பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தான் 20 ஆயிரம் புத்தகங்கள் வாசித்து இருப்பதாக அண்ணாமலை கூறியிருந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி இவ்வாறு விமர்சித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?