தமிழ்நாடு
தமிழக பட்ஜெட் 2022-2023ல் கவனிக்க வேண்டிய 35 முக்கிய அறிவிப்புகள்!

தமிழக பட்ஜெட் 2022-2023-ஐ நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். அதில் வெளியான 30 முக்கிய அறிவிப்புகளை இங்கு பார்க்கலாம்.

1) சென்னையை மேம்படுத்தச் சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
2) கிழக்கு கடற்கரை சாலையை 4 வழிச்சாலையிலிருந்து 6 வழிச்சாலையாக அகலப்படுத்த 135 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
3) தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் 13,000 கோடி ரூபாய் இழப்பை அரசே ஏற்கும்.
4) மினாரத் துறை வழங்கும் மின் கட்டணம் மானியத் தொகைக்கு 9,379 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
5) பேருந்துகள் நவீன மயமாக்கல், மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்ய 5,375 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
6) அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்க 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
7) அரசு பள்ளிகளைத் தரம் உயர்த்தும் வகையில் பேராசிரியர் அன்பழகன் பெயரில் புதிய திட்டம் உருவாக்கப்படும்.
8) பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவைக்கு 928 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
9) மகளிர் இலவச பேருந்து பயணத் திட்ட மானியமாக 1,620 கோடி வழங்கப்படும்.
10) தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 500 மின்சார பேருந்துகள் வாங்கப்படும்.
11) பெரியாரின் சிந்தனைகள் அசங்கிய தொகுப்பு 21 இந்திய, உலக மொழிகளில் வெளியிட 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
12) விழுப்புரம், ராமநாதபுரத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
13) சென்னை அருகே 300 கோடி ரூபாய் செலவில் புதிய பொட்டானிகிக்கல் கார்டன் அமைக்கப்படும்.
14) சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா 20 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
15) நில அளவை ‘ரோவர்’ இயந்திரங்களுக்கு 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
16) நீர் நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களைப் பாதுகாக்கச் சிறப்பு நிதியாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
17) சென்னை வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
18) ஆதரவில்லாத கைவிடப்பட்ட விலங்குகளைப் பராமரிக்க வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் அமைக்க 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
19) பழமையான தேவாலயங்கள், தர்ஹாக்கல் புனரமைக்க 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
20) MLA-க்களின் தொகுதி மேம்பாட்டிற்கு 705 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
21) இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
22) உரிய நேரத்தில் வானிலை எச்சரிக்கை வழங்குவதற்கு புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
23) பயிர்க்கடன், நகைக்கடன் சுய உதவிகளின் கடன் தள்ளுபடிக்காக 4,131 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
24) டெல்டா மாவட்டங்களில் உள்ள கால்வாய்களைத் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
25) அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படும்.
26) அரசு பள்ளிகளில் 18 ஆயிரம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.
27) சென்னை செஸ் ஒலிம்பியார் போட்டியில் 150 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கச் சிறப்புத் திட்டம்.
28) ஆர்.கே.நகரில் சர்வதேச தரத்தில் புதிய விளையாட்டு அரங்கம்.
29) நிதிப் பற்றாக்குறை 8 ஆண்டுகளுக்குப் பிறகு 4.61 சதவீதத்திலிருந்து 3.80 சதவீதமாகக் குறையும்.
30) வேளாண்மை உள்ளிட்ட முதன்மைத் துறைகளில் வளர்ச்சி வீதத்தை அதிகரித்தல்.
31) சமூகப் பாதுகாப்பினை வலுப்படுத்தல்
32) பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்புத் திட்டங்கள் வாயிலாக இளைஞர்களுக்கு வேலை பெறும் திறனை அதிகரித்தல்.
33) புதிய முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமும் தற்போதிருக்கும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதன் வாயிலாகவும் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.
34) பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கான தகுதியுள்ள பயனாளிகள் பட்டியல் தயாராகி வருகிறது. அது தயாரான உடன் உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும்.
35) தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்காக 496.52 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
[pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/Budget-2022-2023_compressed.pdf” title=” tamil nadu budget pdf”]