Connect with us

இந்தியா

போலீஸ் வேலையில் சேர்ந்த ஒரே ஆண்டில் கைது.. மல்யுத்த வீராங்கனை செய்த அதிர்ச்சி குற்றம்..!

Published

on

மல்யுத்த வீராங்கனை ஒருவருக்கு விளையாட்டு கோட்டா மூலம் காவல்துறையில் வேலை கிடைத்த நிலையில் வேலை கிடைத்த ஒரே ஆண்டில் அவர் கடத்தல் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டதோடு சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நைனா கன்வால் என்ற பெண் சர்வதேச மல்யுத்த வீராங்கனை என்பதும் அவரது சகோதரர் மற்றும் தந்தையும் மல்யுத்த ஆர்வலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரியானா மாநிலத்தில் மல்யுத்த விளையாட்டில் பல விருதுகளை வென்ற அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ராஜஸ்தான் காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணியை பெற்றார். விளையாட்டு ஒதுக்கீட்டில் அவருக்கு வேலை கிடைத்த நிலையில் அவர் நியமனம் செய்யப்பட்ட ஒரே வருடத்தில் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்த நைனா, நண்பர் சுமித் நந்தல் என்பவருடன் இணைந்து ஆயுதங்களை கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை செய்ததாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவரது குடியிருப்பில் சோதனை செய்தபோது இரண்டு சட்ட விரோதமாக வைத்திருந்த துப்பாக்கிகளை அவர் ஜன்னல் வழியாக வீசியதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த அந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதோடு அவரை சஸ்பெண்ட் செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருவதாகவும் தீவிரவாத குழுக்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணையில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. காவல் துறையில் பணிபுரியும் ஒருவரே கடத்தல் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் இது குறித்து நைனா கன்வால் தந்தை கூறும் போது தனது மகள் முற்றிலும் அப்பாவி என்றும் அவரிடம் சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதாக கூறப்படுவது தவறு என்றும் கூறினர். இவர் ஒரு இன்ஸ்டாகிராம் மாடல் என்பதும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் என்று அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பதும் கிளாமராக இருக்கும் இந்த புகைப்படங்கள் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?