Connect with us

இந்தியா

சென்னையை நோக்கி நகர்கிறதா காற்றழுத்த தாழ்வு? கனமழைக்கு வாய்ப்பு!

Published

on

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு வரும் 5ஆம் தேதி உருவாகும் என்றும் அது வட தமிழகத்திற்கு அதாவது சென்னை நோக்கி நகர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாகவும் டிசம்பர் 5ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, புயலாக வலுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து 8ஆம் தேதி தமிழகம் புதுவை மற்றும் அதை ஒட்டிய தெற்கு கடலோர பகுதியில் கரையை கடக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் சென்னைக்கு அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் நாளை மற்றும் நாளை மறுநாள் புதுவை மற்றும் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

storm cycloneசென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் மட்டும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த மாதம் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி இருக்கும் நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீண்டும் சென்னையில் மழை பெய்யும் என்ற கணிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?