உலகம்
11 லட்சம் விளக்குகளை சேர்ந்து ஏற்றும் அகோரிகள்.. கும்பமேளாவில் பிரம்மாண்ட பூஜை.. ஏன் தெரியுமா!

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவின் ஒரு பகுதியாக அகோரிகள் எல்லாம் சேர்ந்து 11 லட்சம் தீபங்களை ஏற்ற இருக்கிறார்கள்.
உத்தர பிரதேசத்தில் இந்து சாமியார்கள், அகோரிகள் கலந்து கொண்டு வழிபடும் கும்பமேளா தற்போது பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இந்தியா முழுக்க லட்சக்கணக்கான சாமியார்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த விழாவில் ராமர் கோவிலை மையமாக வைத்து பெரிய பூஜை ஒன்றை அகோரிகள் நடத்த இருக்கிறார்கள்.
இந்த கும்பமேளாவில் மொத்தம் 13 கோடி இந்து சாமியார்கள் கலந்து கொள்கிறார்கள். கடந்த செவ்வாய் கிழமை இந்த விழா தொடங்கியது. கங்கை மட்டுமில்லாமல் யமுனா, சரஸ்வதி நதிக்கரையில் அகோரிகள் வழிபட்டனர். மார்ச் 4ம் தேதி வரை 55 நாட்கள் இந்த விழா நடக்கிறது.


















