Connect with us

சினிமா செய்திகள்

Kantara: ஆங்கிலத்தில் வெளியான காந்தாரா!

Published

on

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கன்னடத்தில் வெளியான  திரைப்படம் ‘காந்தாரா’. கிஷோர், சப்தமி கௌடா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படத்தை ஹோம்பலே ஃபில்ம்ஸ் தயாரித்தது. கேஜிஎஃப் 1&2 படங்களுக்குப் பிறகு கன்னட சினிமாவை அடுத்த தளத்துக்கு கொண்டு சென்ற படமாக அமைந்தது.

16 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் வெளியாகி, உலகம் முழுவதும் 400 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.  கன்னட திரையுலகத்தில் மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி அமோகமான வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில் காந்தாரா திரைப்படம் தற்போது ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது என்ற தகவலை தனது ட்விட்டர் பக்கம் மூலம் அறிவித்துள்ளார் படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி.

‘கந்தாரா’ படத்தின் 100 நாள் வெற்றி விழாவின் போது, ​​படத்தின் இரண்டாம் பாகம் 2024-ம் ஆண்டு வெளியாகும் என ரிஷப் சமீபத்தில் அறிவித்தார். ‘கந்தாரா 2’ படத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், முன்கதையாக இருக்கும் என்றும் ரிஷப் தெரிவித்துள்ளார். படத்தின் அடுத்த பாகம் , முதல் பாகத்திலிருந்து பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களை உள்ளடக்கி தெய்வத்தின் வரலாற்றைக் கூறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்போது ரிஷப்பின் குழு ‘கந்தாரா 2’ படத்திற்கான ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?