Connect with us

செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: 1.63 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.8000 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!

Published

on

தமிழ்நாடு அரசு தொடர்ந்து மக்கள் நலத் திட்டங்களில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில், மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு சமூக பாதுகாப்பு பயனாளிகள் மற்றும் மீனவர் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்கப்படுவதாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கோடைக்கால சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.2000 வழங்கப்பட்டிருந்தது. இந்த தொகை பிப்ரவரி மாதத்தில் வழங்கப்பட்டதால் பலர் வங்கிக் கணக்கில் பணம் வரவு செய்யப்பட்டதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறாத ஆனால் அரசின் பிற ஓய்வூதியத் திட்டங்களில் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அந்த கோரிக்கையை ஏற்று, மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து ரூ.2000 நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.

📌 பயனாளிகள் விவரம்:

  • சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெறும் 29.29 லட்சம் முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கு தலா ரூ.3200

  • 5.92 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3500

  • பராமரிப்பு உதவித்தொகை பெறும் 2.58 லட்சம் மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு தலா ரூ.4000

🎣 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.8000

ஏப்ரல் முதல் ஜூன் வரை மீன்பிடித் தடை காலத்திற்கான உதவித் தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 மீனவர் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. இது கடலோர வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

🌱 தேயிலை விவசாயிகளுக்கு நிதி

நீலகிரி மாவட்டம் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்கு கிலோக்கு ரூ.2 ஆதார விலை வழங்கப்படுகிறது. இதற்காக மொத்தம் ரூ.8.53 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் எந்த ஒரு குடும்பமும் பின்தங்காமல் இருக்க நடவடிக்கைகள் தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

இந்தியா1 மணி நேரம் ago

விண்வெளியில் சேகரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரமாக மாற்றப்பட்டு மைக்ரோவேவ் மூலம் பூமிக்கே ஜப்பானின் “OHISAMA” திட்டம்,

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.05.2026

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.05.2026

இந்தியா11 மணி நேரங்கள் ago

இலவச ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்படும்! தமிழ்நாடு அரசு கொடுத்த வார்னிங்

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 25.05.2026!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

திருவாதிரை நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: சிக்கல்கள், நஷ்டம் சந்திக்கக்கூடிய 3 ராசிகள்!

உலகம்13 மணி நேரங்கள் ago

“தோல்வியாளர்களை கேட்காதீர்கள்” – ஈரான் ஒப்பந்தம் இன்னும் முழுமையாக முடிவாகவில்லை: டிரம்ப்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 25 மே 2026

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

மே 31ல் ராகுவின் வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, வெற்றி பெறப்போகும் 3 ராசிகள்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

மே 29ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: பணம், பதவி, அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்!

இந்தியா6 நாட்கள் ago

உங்க வீட்டுக்கு வர்ற Gas சிலிண்டர்ல இப்படி ஒரு மோசடியா? பொதுமக்கள் எச்சரிக்கை!

தமிழ்நாடு6 நாட்கள் ago

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களை புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

இந்தியா6 நாட்கள் ago

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் மத்திய அரசு NIOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

தமிழ்நாடு5 நாட்கள் ago

ABVP கல்வி சீர்திருத்த கோரிக்கைகளில் 8 அம்சங்களுக்கு ஒப்புதல் தெரிவித்த முதல்வர் விஜய்

வணிகம்7 நாட்கள் ago

EPFO ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: குறைந்தபட்ச பென்ஷன் ரூ.3,000 ஆக உயருமா? முக்கிய அப்டேட் வெளியீடு!

தமிழ்நாடு5 நாட்கள் ago

இருமொழிக் கொள்கை தொடரும்: PM SHRI திட்டம் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல்

Translate »
Transformando o trabalho com automação inteligente e assistentes de ia personalizados para empresas modernas. aaa mush love. Security.