சினிமா செய்திகள்
எதிர்பார்த்த முன்பதிவு இல்லை: காத்துவாங்குகிறதா ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’?
விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் முன் பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில் தற்போது சென்னையில் முக்கிய திரையரங்குகளில் கூட முதல் காட்சியே நிரம்ப வில்லை என்று தெரியவருகிறது .
சென்னை கமலா திரையரங்கம் தவிர மற்ற அனைத்து திரையரங்குகளிலும் ஏராளமான டிக்கெட்டுகள் காலியாக இருப்பது தெரியவந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து வருகிறது .
ஏற்கனவே வெளியான ’கேஜிஎப் 2’ திரைப்படம் தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வரும் நிலையில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு குறைவான தியேட்டர்களே கிடைத்துள்ளது. ஆனால் அந்த திரையரங்குகளிலும் பெரிதாக முன்பதிவு இல்லை என்ற தகவலை படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
இருப்பினும் இளைஞர்களால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையுடன் படக்குழுவினர் காத்திருக்கின்றனர்.