Connect with us

சினிமா

பொன்னியின் செல்வன்2′ இசை வெளியீட்டு விழாவிற்கு வரும் விஜய்?

Published

on

‘பொன்னியின் செல்வன்2’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, த்ரிஷா, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்க கூடிய திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து படத்தின் புரோமோஷன்களை தீவிரமாக படக்குழு தொடங்கியுள்ளது. அதன்படி படத்திலிருந்து முதல் பாடல், ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன், வந்தியத்தேவன், குந்தவை என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் எப்படி இதற்கு தயாராகின என்ற புரமோஷன் வீடியோ ஆகியவற்றை படக்குழு தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 29ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது என்பதையும் படக்குழு அறிவித்துள்ளது. இதன் முதல் பாகத்திற்கான இசை வெளியீட்டு விழாவும் இதே போன்று, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இதில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அது போலவே இந்த பாகத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கும் ரஜினி, கமல் உட்பட நடிகர் விஜய்யும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தற்போது ‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பி இருக்கிறார். அதனால் ‘பொன்னியின் செல்வன்2’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு முன்பே ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இயக்குநர் மணிரத்னம் எடுக்க முயன்ற போது, அதில் நடிகர் விஜய் நடிக்க கதை சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா இல்லையா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?