Connect with us

இந்தியா

ரயில் டிக்கெட் காத்திருப்பு பட்டியலை குறைக்க ‘குளோன் ரயில் திட்டம்’.. இந்தியன் ரயில்வேஸ் அதிரடி!

Published

on

ரயில் பயணிகள் அதிகம் பயணிக்கும் வழித்தடங்களில் குளோன் ரயில் என்ற புதிய திட்டத்தை இந்திய ரயில்வேஸ் அறிமுகம் செய்ய உள்ளது.

குளோன் ரயில்

குளோன் ரயில் சேவையின் கீழ், பயணிகள் அளவுக்கு அதிகமாக ஒரு ரயிலின் டிக்கெட்டை புக் செய்யும் போது குளோன் ரயில் சேவை தொடங்கும். குளோன் ரயில் சேவை கீழ் புக் செய்யப்பட்ட டிக்கெட்கள் ரயில் புறப்படும் 4 மணி நேரத்திற்கு முன்பான சார்ட் தயார் படுத்தப்படும் போது தான் பயணிகளுக்குத் தெரிவிக்கப்படும். அதுவரை பயணியின் டிக்கெட் காத்திருப்பு பட்டியலில் தான் இருக்கும்.

இந்த குளோன் ரயில் பெட்டிகளில் பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்களின் விவரம், ரைல் புறப்படும் 4 மணி நேரத்திற்கு முன்பு தான் பயணிகளுக்கு அறிவிக்கப்படும். இந்த குளோன் சேவைக்கு கூடுதல் ரயில் பெட்டிகள் தேவை. எனவே கூடுதல் ரயில் பெட்டிகள் உள்ள முக்கிய ரயில் நிலையங்களிலிருந்து மட்டுமே இந்த சேவையை தொடங்க உள்ளனர்.

விகல்ப் திட்டம்

ரயில் டிக்கெட் காத்திருப்பு பட்டியலைக் குறைக்க ஏற்கனவே விகல்ப் ரயில் சேவையை இந்தியன் ரயில்வேஸ் செயல்படுத்தி வருகிறது. விகல்ப் திட்டத்தில் ஒரு வழித்தடத்தில் செல்லும் குறிப்பிட்ட ரயிலில் ட்க்கெட் புக் செய்து காத்திருப்பு பட்டியலிலிருந்தால், அடுத்த 2 நாட்களுக்குள் டிக்கெட் கிடைத்தால் போதும் என்று பயணி நினைத்தால் விகல்ப் சேவையை தேர்வு செய்யலாம். விகல்ப் தேர்வு செய்த ரயில் பயணிகளுக்கு அடுத்தடுத்து அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்களில் டிக்கெட் ஏற்பாடு செய்து தரப்படும்.

மத்திய அரசு வரும் காலத்தில் ரயில் டிக்கெட் புக்கிங்கில் காத்திருப்பு பட்டியல் என்ற ஒன்று இல்லாமல், கடைசி நிமிடம் வரை டிக்கெட் புக் செய்தாலும் சீட் கிடைப்பது போன்ற திட்டங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?