இந்தியா
இந்தியன் ரயில்வேஸ் அதிரடி மாற்றம்.. ‘லோவர் சைடு பர்த்’ பயணிகள் மகிழ்ச்சி!
இந்தியன் ரயில்வேஸ் ‘லோவர் சைடு பர்த்’ சிட்டில் கொண்டு வந்துள்ள மாற்றத்தால், ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரயில் பயணங்களில் ஏசி ஸ்லீப்பர் மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு பயணம் செய்யும் போது பலரும் விரும்பும் இருக்கை ‘லோவர் சைடு பர்த்’. ஆனால் இந்த சீட்டில் பயணிக்கும் போது இருக்கும் ஒரு சிக்கல் உறங்கும் போது இடையில் கொஞ்சம் கீழே இறங்கும். அதனால் இடுப்பு வழி ஏற்படும். அதற்குக் காரணம் பகல் நேரத்தில் இருவர் தனித்தனியாக அமர்ந்து பயணிக்க அளிக்கப்பட்டுள்ள மடிக்கும் வசதி.
இந்த நீண்ட நாள் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுள்ள இந்தியன் ரயில்வேஸ், ‘லோவர் சைடு பர்த்’ சீட்டுக்கு பக்கவாட்டில் புதிதாக ஒரு பலகை ஒன்றைப் பொருத்தியுள்ளது.
இரவு நேரத்தில் படுக்கும் போது சீட்டை மடிப்பது மட்டுமல்லாமல் அந்த பலகையையும் இழுத்து வைக்க முடியும். அப்படி செய்யும் போது பிளாட்டாக சீட் இருக்கும். நடுவில் மடங்காது. இடுப்பு வழி வராது.
அதுகுறித்து டிவிட் செய்துள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், எப்படி அந்த புதிய வசதி ‘லோவர் சைடு பர்த்’ சீட்டில் அமைக்கப்பட்டுள்ளது என்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்!
यात्रियों के सुविधाजनक सफर के लिए प्रयासरत भारतीय रेल, इसी का उदाहरण है सीटों में किये गये कुछ बदलाव, जिनसे यात्रियों का सफर हुआ और अधिक आरामदायक। pic.twitter.com/Q4rbXXYd7f
— Piyush Goyal Office (@PiyushGoyalOffc) December 11, 2020