Connect with us

இந்தியா

வேலைநீக்க நடவடிக்கை இருக்கட்டும்… இந்திய ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜாக்பாட்!

Published

on

இந்தியா உள்பட உலகம் முழுவதும் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக அமேசான் நிறுவனம் 18000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது என்பதும் தெரிந்ததே.

கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், ஆப்பிள், ட்விட்டர் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் நூற்றுக்கணக்கானோர் முதல் ஆயிரக்கணக்கானோர் வரை வேலைநீக்க நடவடிக்கையை எடுத்து வருவது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி சிறிய நிறுவனங்கள். ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்தியாவை பொறுத்த வரை ஏற்கனவே வேலையில் உள்ளவர்களுக்கு இந்த ஆண்டு சம்பள விகிதம் அதிகரிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. வேலை நீக்க நடவடிக்கை ஒரு பக்கம் இருந்தாலும் ஆசியாவின் மிகப்பெரிய தொழில்துறை நாடான இந்தியாவில் இந்த ஆண்டு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளன.

சிறந்த திறமையான ஊழியர்களுக்கு 15% முதல் 30 சதவீதம் வரை சம்பளம் அதிகரிக்கும் என்றும் சராசரியாக இந்தியாவில் உள்ள ஊழியர்களுக்கு 9.8% இந்த ஆண்டு சம்பளம் அதிகரிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு 9.4% சம்பளம் உயர்ந்த நிலையில் உயர் தொழில்நுட்ப தொழில்கள், அறிவியல் மற்றும் சுகாதாரம், பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10% சம்பள உயர்வு இருக்கும் என்று முன்னணி நிறுவனம் ஒன்றின் அறிக்கை தெரிவித்துள்ளது.

Best Foreign Countries To Live, Work And Salary In 2018

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று கருதப்படும் நிலையில் இந்த சம்பள விகிதம் எதிர்பார்த்ததுதான் என்று பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கானோர் படித்து முடித்து பட்டதாரிகளாக வெளியே வருகின்றனர் என்றும் அவர்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு படித்து முடித்த உடனே வேலை கிடைத்து விடுகிறது என்றும் வேலையின்மை விகிதம் அதிகரித்தாலும் திறமையான ஊழியர்களுக்கு நிச்சயம் உடனடியாக வேலை கிடைத்து வருகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்தியாவில் உள்ள 818 நிறுவனங்களில் மொத்தமாக 8 லட்சம் ஊழியர்களுக்கு மேல் கடந்த ஆண்டு மட்டும் பணி கிடைத்துள்ளது என்றும் 61% நிறுவனங்கள் முக்கிய நபர்களுக்கு படித்து முடிக்கும் முன்பே வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன என்றும் கூறப்படுகிறது.

உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் மற்றும் 9.8% சம்பள உயர்வு என்பது மிகப்பெரிய வளர்ச்சி என்ற் கூறப்படுகிறது. டயர் 1 நகரங்கள் மட்டுமின்றி டயர் 2 நகரங்களில் பணிபுரியும் பணியாளர்களும் அதிக ஊதியம் பெற்று வருகிறார்கள் என்றும் கணக்கெடுப்பு அறிக்கை ஒன்றை தெரிவித்துள்ளது.

எனவே இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் திறமையான பணியாளர்கள் இருந்தால் அவர்களுக்குரிய திறமை நிச்சயம் மதிக்கப்படும் என்றும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே வேலை கிடைக்கவில்லை என்று புலம்புவதை விட்டுவிட்டு திறமையை வளர்த்துக் கொண்டால் நல்ல நிறுவனங்கள் தேடி வந்து வேலை கொடுக்கும் என்றும் அது மட்டுமின்றி நல்ல சம்பளத்தையும் கொடுக்கும் என்பதுதான் இதன் மூலம் தெரிய வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்1 மணி நேரம் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்1 மணி நேரம் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்1 மணி நேரம் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்1 மணி நேரம் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்1 நாள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

இந்தியா7 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வணிகம்6 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா5 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா5 நாட்கள் ago

#21yearsofanniyan

Translate »
It takes less than 60 seconds to set up your professional profile.