இந்தியா
இனி UPI மூலம் வெளிநாட்டுக்கும் பணம் அனுப்பலாம்.. சூப்பர் அறிவிப்பு..!
கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் இந்தியாவாக மாற்றிய பிரதமர் மோடிக்கு ஒரு பக்கம் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் டிஜிட்டலில் பண பரிவர்த்தனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
UPI மூலம் வங்கிக்கு செல்லாமல் எளிய முறையில் பண பரிமாற்றம் நடைபெறுகிறது என்பதும் இதனை நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களில் உள்ளவர்களும் தற்போது பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுவரை உள்நாட்டில் மட்டுமே UPI பண பரிமாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளிநாட்டுக்கும் பணம் பரிமாற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முதலாக வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்துவதை போன்பே அறிமுகம் செய்கிறது என்பது தற்போது சந்தோஷமான செய்தி ஆகும்.
இதனை அடுத்து அனைத்து போன்பே பயனர்களும் UPI மூலம் வெளிநாடுகளில் உள்ள வணிகரகளுக்கு பணம் செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சர்வதேச கடன் மற்றும் அந்நிய செலவாணி அட்டைகள் மூலமே வெளிநாட்டு வணிகர்களுக்கு பணம் செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது போன்பே மூலம் வெளிநாட்டுக்கு செல்லும் பயனர்கள் இந்திய வங்கி கணக்கிலிருந்து வெளிநாட்டு நாணயத்தில் பணம் டெபிட் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் கட்டமாக நேபாளம், பூட்டான், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள சர்வதேச வணிக விற்பனை கியூஆர் குறியீடுகளுடன் பண பரிவர்த்தனையை அனுமதித்துள்ளன. இன்னும் ஒரு சில மாதங்களில் மேலும் சில நாடுகளுக்கு இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து போன் பே நிறுவனர் மற்றும் சிடிஓ ராகுல் சாரி கூறுகையில் ’UPI இன்டர்நேஷனல் மூலம் உலகின் பிற நாடுகளுக்கும் பண பரிவர்த்தனை செய்ய அனுமதிப்பது ஒரு முக்கிய படியாக பார்க்கப்படுகிறது. இது ஒரு கேம் சேஞ்ஜராக இருக்கும், வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், வெளிநாடுகளில் பொருட்கள் வாங்கினால் UPI மூலமே பணம் செலுத்திக் கொள்ளலாம் என்றும் கூறினார்.