Connect with us

சினிமா

’நான் மீண்டும் திரும்பி வருவேன்’- சமந்தா நம்பிக்கை!

Published

on

நடிகை சமந்தா நடிப்பில் இருந்து பிரேக் எடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை சமந்தா தற்போது கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு பிரேக் எடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். மையோசிடிஸ் நோய் பாதிப்பால் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக சமந்தா போராடி வருகிறார். இந்த நிலையிலும், ‘யசோதா’ படத்தின் டப்பிங், ‘சாகுந்தலம்’ படத்திற்கான புரமோஷன் ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அவர், நடிப்பில் இருந்து சிறிது காலம் விலக போகிறார் என முன்பு சொல்லப்பட்டாலும், ‘குஷி’, ‘சிட்டாடல்’ வெப் சீரிஸ் படப்பிடிப்பு என தீவிரமாக பங்கேற்று வருகிறார். ‘சாகுந்தலம்’ படத்தின் புரோமோஷனுக்காக சமீபத்தில் சமந்தா கொடுத்திருந்த பேட்டியில் நடிப்புக்காக பிரேக் விடப்போவதைத் தெரிவித்து இருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் பேசியிருப்பதாவது, “நான் ‘குஷி’, ‘சிட்டாடல்’ படப்பிடிப்புக்குப் பிறகு நடிப்பில் இருந்து பிரேக் எடுக்கப் போகிறேன்.

மையோசிடிஸ் நோயில் இருந்து நான் முன்பைவிட நன்றாக தேறி வந்தாலும் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அதனால், சிறிது காலம் பிரேக் எடுக்கப் போகிறேன். ஆனால், சீக்கிரம் திரும்பி வருவேன்” என பேசியுள்ளார் சமந்தா.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?