சினிமா செய்திகள்
மோடியை இன்று பார்த்தால் அம்பேத்காரே பெருமையடைவார்: இளையராஜா பேச்சு!
பிரதமர் மோடியின் செயல்பாடுகளை இன்று அம்பேத்கார் பார்த்தால் அவர் பெருமைப்படுவார் என இசைஞானி இளையராஜா பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘மோடியும் அம்பேத்காரு’ம் என்ற புத்தகம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் இசைஞானி இளையராஜா பேசினார். இந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதியவரும் இளையராஜாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா தற்போது வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும் கல்வித்துறை தொழில்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்றும் இதனை இன்று அம்பேத்கார் பார்த்திருந்தால் அவர் பெருமைப்படுவார் என்றும் இளையராஜா பேசினார்.
இந்தியா மிகச் சிறந்த உள்கட்டமைப்பு செய்யப்படும் நாடுகளில் ஒன்று என்றும் சமூக நீதி விஷயத்திலும் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது என்றும் மோடியின் ஆட்சியின் கீழ் முத்தலாக் உள்ளிட்ட சட்டத்தை இயற்றியது மூலம் பெண்கள் வாழ்வில் ஒளீ ஏற்பட்டுள்ளது என்றும் அவர் பேசியுள்ளார் .
அம்பேத்காரை மோடியுடன் ஒப்பிட்டு இளையராஜா பேசியது நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் இளையராஜா வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.