ஆரோக்கியம்
மழைக்காலத்தில் இருமல்-சளி தடுக்கும் பாட்டி கைப்பக்குவ பூண்டு மிளகு குழம்பு ரெசிபி!
Published
9 மாதங்கள் agoon
By
Poovizhi
மழைக்காலத்தில் அடிக்கடி ஏற்படும் இருமல் மற்றும் சளி பாதிப்புகளைத் தடுக்கும் அற்புதமான பாட்டி கைப்பக்குவ உணவாக பூண்டு மிளகு குழம்பு சிறப்பு வாய்ந்தது. இது சுவையிலும், மருத்துவ குணங்களிலும் சிறந்ததாக இருக்கும். பத்து நாட்கள் வரை வைத்தாலும் சுவை குறையாது.
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய்
கடுகு, வெந்தயம்
சின்ன வெங்காயம்
வெள்ளைப்பூண்டு
கருவேப்பிலை, வரமிளகாய்
மஞ்சள் தூள்
தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், கடுகு, உளுத்தம்பருப்பு
இஞ்சி
புளி
பெருங்காயம் பொடி
வெல்லம்
தயாரிக்கும் முறை:
மண் பாத்திரத்தில் (இருந்தால் கூடுதல் சுவை) நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். பின்னர் சின்ன வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதன் பின் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
வேறு ஒரு கடாயில் தனியா, மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கடுகு ஆகியவற்றை வறுத்து தனியாக எடுக்கவும். அதே கடாயில் கருவேப்பிலை, இஞ்சி வறுத்து சேர்க்கவும்.
வறுத்த அனைத்தையும் மிக்ஸியில் நன்றாக அரைத்து குழம்பில் சேர்க்கவும்.
புளி கரைசல் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
இறுதியாக வெல்லம், பெருங்காயம், நல்லெண்ணெய், கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
இதனால் கிடைக்கும் பூண்டு மிளகு குழம்பு சுவையில் அற்புதமாகவும், உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும். இருமல், சளி, தொண்டை வலி போன்றவற்றை குணப்படுத்தும் இயற்கை மருந்தாகவும் இது செயல்படும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.



















