Connect with us

தமிழ்நாடு

கடும் நெருக்கடி எதிரொலி: நீட் மசோதா குறித்து அதிரடி முடிவெடுக்கும் கவர்னர்!

Published

on

தமிழக அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா குறித்து எந்தவித முடிவும் எடுக்காமல் இருக்கும் கவர்னர் ஆர்.என். ரவி அவர்களுக்கு நெருக்கடி முற்றியதால் அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என கோரிக்கை விடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்ட பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியதை அடுத்து கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி மீண்டும் அதே மசோதாவை நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அடுத்து தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

சட்டமன்ற மாண்பையும் மக்களையும் ஆளுநர் மதிக்கவில்லை என குற்றச்சாட்டு பகிரங்கமாக எழுந்து வருவதை அடுத்து நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுனர் ஆர்.என். ரவி முடிவு எடுத்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

நீட் விலக்கு உள்பட தாமதமாகி உள்ள அனைத்து மசோதாக்கள் மீதும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் நீட் விலக்கு மசோதா மீது குடியரசுத்தலைவர் முடிவெடுக்க எத்தனை மாதங்கள் ஆகும் என்பது கேள்விக்குறியே.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?