தமிழ்நாடு
கடும் நெருக்கடி எதிரொலி: நீட் மசோதா குறித்து அதிரடி முடிவெடுக்கும் கவர்னர்!
தமிழக அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா குறித்து எந்தவித முடிவும் எடுக்காமல் இருக்கும் கவர்னர் ஆர்.என். ரவி அவர்களுக்கு நெருக்கடி முற்றியதால் அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என கோரிக்கை விடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்ட பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியதை அடுத்து கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி மீண்டும் அதே மசோதாவை நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அடுத்து தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
சட்டமன்ற மாண்பையும் மக்களையும் ஆளுநர் மதிக்கவில்லை என குற்றச்சாட்டு பகிரங்கமாக எழுந்து வருவதை அடுத்து நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுனர் ஆர்.என். ரவி முடிவு எடுத்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
நீட் விலக்கு உள்பட தாமதமாகி உள்ள அனைத்து மசோதாக்கள் மீதும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் நீட் விலக்கு மசோதா மீது குடியரசுத்தலைவர் முடிவெடுக்க எத்தனை மாதங்கள் ஆகும் என்பது கேள்விக்குறியே.