இந்தியா
இந்தியாவுக்கு எதிராக ஒருபோதும் பந்தயம் கட்ட வேண்டாம்.. அதானி விவகாரம் குறித்து ஆனந்த் மஹிந்திரா!

இந்தியாவுக்கு எதிராக ஒருபோதும் உலக ஊடகங்கள் பந்தயம் கட்ட வேண்டாம் என அதானி விவகாரம் குறித்து இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சில நாட்கள் முன்னர் அதானி நிறுவனத்தில் நடந்த மோசடி குறித்து அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹின்டன்பெர்க் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. இந்த அறிக்கை காரணமாக அதானி நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்தன என்பதும் இதனால் இந்தியாவின் பொருளாதாரம் அச்சத்துக்கு உள்ளானதாகவும் கூறப்பட்டது.
அமெரிக்காவை தளமாக கொண்ட இந்த நிறுவனம் அதானி நிறுவனங்களின் பங்குகளை ஷார்ட் செய்திருப்பதாகவும் அதனால் அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபம் கிடைத்திருப்பதாகவும் கூறப்பட்டது. அதானின் நிறுவனத்தின் பங்குகள் சரிந்து வந்த போது ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்து அதானி குழுமம் விளக்கம் அளித்தது என்றாலும் விளக்கத்தையும் மீறி தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 24ஆம் தேதி வெளியானதில் இருந்து அதானி நிறுவனத்தின் பங்குகள் மிக மோசமாக சரிந்தன என்பதும் இதனால் அவர் உலகின் மூன்றாவது பணக்காரர்களில் இருந்து 15வது இடத்துக்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதானி நிறுவனங்களை பாதுகாப்பதற்காக மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும் பெரிய பணக்காரர்கள் இடம் இருந்து அவருக்கு உதவி செய்யுமாறு மத்திய அரசு வலியுறுத்தி வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் அதானி நிறுவன விவகாரம் குறித்து பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஆவேசமாக பதிவு செய்துள்ளார். அதில் வணிகத் துறையில் தற்போது தற்போதைய சவால்கள் உலகப் பொருளாதார சக்தியாக இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் லட்சியங்களை தடுக்க உலகளாவிய ஊடகங்கள் முயற்சிக்கின்றன என்று எழுதியுள்ளார். பூகம்பங்கள், வறட்சிகள், மந்த நிலைகள், போர்கள், பயங்கரவாக தாக்குதல்கள் ஆகியவற்றால் எதிர்கொள்ளும் பங்குச்சந்தையை நான் கண்டிருக்கின்றேன், ஆனால் அதை எல்லாம் நாங்கள் மீண்டும் வந்துள்ளோம், இந்தியாவுக்கு எதிராக ஒருபோதும் பந்தயம் கட்ட வேண்டாம் என உலக மீடியாக்களுக்கு அவர் எச்சரிக்கை கொடுக்கும் வகையில் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
இந்த ட்விட் தற்போது வைரல் வரும் நிலையில் ஆனந்த் மகேந்திராவின் இந்த ட்வீட்டிற்கு பலர் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். அதில் அதானி என்பது இந்தியா அல்ல என்றும் ஒரு தனிப்பட்ட நபர் மீது அவர் செய்யும் முறைகேடுகள் குறித்து உலக மீடியா பேசுவதை இந்தியாவிற்கு எதிரான ஒரு செய்தியாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் ஹிண்டன்பெர்க் நிறுவனம் இந்தியாவுக்கு எதிராக எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை என்றும் அதானி என்ற தனிப்பட்ட தொழிலதிபர் மீது மட்டுமே குற்றம் சாட்டி உள்ளது என்றும் தெரிவித்து வருகின்றனர்.
Global media is speculating whether current challenges in the business sector will trip India’s ambitions to be a global economic force. I’ve lived long enough to see us face earthquakes, droughts, recessions, wars, terror attacks. All I will say is: never, ever bet against India
— anand mahindra (@anandmahindra) February 4, 2023
























