Connect with us

இந்தியா

கேஸ் சிலிண்டர் விலை ரூ.105 உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்

Published

on

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும் நிலையில் மார்ச் மாதம் இன்று பிறந்துள்ள நிலையில் வர்த்தக சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை என்றாலும், வர்த்தக உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டரின் விலை இன்று முதல் ரூபாய் 105 உயர்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு காரணமாக 19 கிலோ கொண்ட வர்த்தக கேஸ் சிலிண்டர் இன்று முதல் டெல்லியில் 2012 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 5 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை ரூபாய் 27 உயர்ந்துள்ளதால் ரூபாய் 569 விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழகத்திலும் வர்த்தக சிலிண்டரின் விலை 105 ரூபாய் உயர்ந்துள்ளதால் 2145.50 என விற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயரவில்லை எனவும், ஏற்கனவே விற்பனையாகி வரும் ரூ.915.50 என்ற விலையிலேயே வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக உபயோகித்திற்கான சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்துள்ளதால் விலைவாசி உயரும் என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?