Connect with us

இந்தியா

இன்று முதல் டிஜிட்டல் கரன்ஸி .. எந்தெந்த வங்கிகளில் கிடைக்கும்? எப்படி பயன்படுத்தலாம்?

Published

on

சில்லறை பயன்பாட்டிற்கான டிஜிட்டல் கரன்ஸி இன்று முதல் அமலுக்கு வருகிறது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் கரன்ஸி அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் டிசம்பர் 1 முதல் டிஜிட்டல் கரன்ஸி வெளியிடப்போவதாக இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது.

முதல்கட்டமாக மும்பை, டெல்லி, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் டிஜிட்டல் கரன்ஸி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும் நாட்டில் பணத்தை நிர்வகிப்பதற்கான பெரும் செலவை குறைக்கும் நோக்கத்தில் இந்த டிஜிட்டல் கரன்ஸி வெளியிடப்படும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

டெல்லி, மும்பை, பெங்களூர் மற்றும் புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் உள்ள ஸ்டேட் பாங்க், ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, ஐ.டி.எப்.சி வங்கி ஆகிய வங்கிகளில் முதல் கட்டமாக டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுவதாகவும், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்.டி.எப்.சி வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கி ஆகிய வங்கிகளில் இன்னும் ஒரு சில நாட்களில் டிஜிட்டல் கரன்ஸி அனுமதிக்கப்படும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் கரன்ஸிக்கும் கிரிப்டோகரன்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தனிநபர் இடையிலும் வணிகர்கள் இடையிலும் இந்த டிஜிட்டல் கரன்ஸியை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா உட்பட சர்வதேச அளவில் கிரிப்டோகரன்சி புழக்கம் அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கி பல்வேறு மோசடிகளை தவிர்ப்பதற்காக இந்த டிஜிட்டல் கரன்ஸியை வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் அச்சமின்றி இந்த டிஜிட்டல் கரன்ஸியை பயன்படுத்தலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. டிஜிட்டல் கரன்ஸி அமலுக்கு வருவதால் காகித கரன்ஸி அச்சடிக்கும் செலவு மிச்சமாகும் என்றும் இந்த டிஜிட்டல் கரன்ஸியை செல்போன் செயலி மூலமாகவும் பயன்படுத்த முடியும் என்றும் ஆன்லைன், ஆஃப்லைன் ஆகிய இரண்டிலும் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இன்று முதல் வெளியாகும் டிஜிட்டல் கரன்ஸியை மக்கள் எவ்வாறு வரவேற்க போகிறார்கள்? இதன் சாதகம் மற்றும் பாதகங்கள் என்ன என்பதை வரும் நாட்களில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?