இந்தியா
பீகாரில் தோனி மீது எப்.ஐ.ஆர் பதிவு என்ன காரணம்?

பீகாரில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தொனி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நியூ குளோபல் புரொட்யூஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து எஸ்கே எண்டர்பிரைஸ் நிறுவனம் ரூ.30 லட்சம் மதிப்பிலான உரங்களை ஆர்டர் செய்தது.
நிறுவனம் பொருட்களை அனுப்பிவிட்டது. ஆனால் டீலர் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்கள் செய்த குழப்பத்தால் சரியான நேரத்தில் உரம் எஸ்கே எண்டர்பிரைஸில் டெலிவரி செய்யப்படவில்லை.
எனவே அந்த உரங்களை விற்க முடியாத எஸ்கே எண்டர்பிரைசஸ், 30 லட்சம் ரூபாயை திரும்ப கேட்டது. அதற்கான செக் எஸ்கே எண்டர்பிரைசஸ்க்கு வழங்கப்பட்டது.

ஆனால் அந்த செக் வங்கியில் போட்ட வேகத்திலேயே பணம் இல்லாமல் திரும்ப வந்துள்ளது. எனவே நியூ குளோபல் புரொட்யூஸ் இந்தியா லிமிடெட், அந்த நிறுவனத்தின் விளம்பர தூதர் மகேந்திரசிங் தோனி மற்றும் 6 பேர் மீது புகார் அளித்ததன் பேரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தோனி மீது இவ்வாறு வழக்கு பதிவு செய்வது முதல் முறையல்ல. ரியல் எஸ்டேட் நிறுவனமான அமரப்பல்லி வாடிக்கையாளர்களிடம் பணத்தை வாங்கிவிட்டு வீடுகளை சரியான நேரத்தில் வழங்கவில்லை என்ற காரணத்துக்காக, அந்த நிறுவனத்தின் விளம்பர தூதர் தோனி மீது வழக்கு தொடக்கப்பட்டு நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.




















