செய்திகள்
வேலுார் இளைஞர் பெயரில் திண்டுக்கல்லில் ரூ.2.41 கோடி மோசடி… இப்படியும் நடக்கிறதே… உஷார்…

வேலுார் மாவட்டம் வேலுார் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் முள்ளிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 37 வயது இளைஞா் வேலுார் மாவட்ட எஸ்.பி.யிடம் அளித்த மக்கள் குறை தீர்வு முகாமில் அளித்த கோரிக்கை மனுவைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த மனுவில் கோரப்பட்டுள்ள விவரம் பின்வருமாறு
வேலுார் மாவட்டம் முள்ளிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நான் இங்கு உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்னேள். ஓரிரு நாட்களுக்கு முன் எனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக எனது தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதனைக் கண்டு அதில்ச்சி அடைந்த நான் உடனே வங்கி கிளை மேலாளரை அணுகி விசாரித்தேன். அப்போது அவர்கள் திண்டுக்கல்லில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்திலிருந்து நீங்கள் ரூ.2.41 கோடி வரிபாக்கி கைத்திருப்பதாகவும் அதனைச் செலுத்தும் வரை தங்கள் கணக்கை முடக்கும் படியும் கோரிக்கை வந்துள்ளது. எனவே தங்கள் கணக்க முடக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் தேவை என்றால் வேலூரில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்திற்கு சென்று கேட்டுக்கொள்ளலாம்’ என்றனர். நானும் அங்கு சென்று விசாரித்த போது எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. திண்டுக்கல் வீரப்பன் கோயில் தெருவில் நடந்து வரும் தனியார் நிறுவனம் சார்பில் அரசுக்கு செலுத்த வேண்டிய வணிக வரி பாக்கி ரூ.2 கோடியே 41 இலட்சத்து 25 ஆயிரத்து 652 ரூபாய் வசூல் செய்யவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சொன்னார்கள்.
ஒரு தனியார் மருத்துவமனையில் சாதாரண மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் நான் எந்த நிறுவனத்தையும் நடத்தக்கூடிய அளவிற்கு வசதி படைத்தவனல்ல. ஆனால் எனது ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகியவற்றை மோசடியாகப் பயன்படுத்தி ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டு மோசடி நடைபெற்றிருக்கிறது. என் சம்பளப் பணத்தை எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நான் இதுவரை எந்த வெளி ஊருக்கும் பயணமாக சென்றதில்லை. எனவே எனது ஆவணங்களை தவறாக பயன்படுத்தி போலியாக நிறுவனம் தொடங்கி வரி மோசடி செய்த ஆசாமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
ஒரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டு மோசடி நடைபெற்றிருப்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது. ஒரு சிறிய கடை தொடங்கி நடத்தவே மாநகராட்சியின் முன் அனுமதி பெற வேண்டும். அப்படியிருக்க ஒரு போலி நிறவனம் தொடங்க எப்படி இவ்வாறு அனுமதி கொடுக்கப்பட்டது என்பது கேள்விக் குறியாக உள்ளது. அந்த நிறுவனத்தின் பேரில் உள்ள வங்கிக் கணக்கு எது என்று ஆராயாமல் வேலுர் நபரின் ஆதார் கார்டு மோசடியாக பயன்படுத்தி தொடங்கப்பட்ட நிறுவனத்திற்கு இதற்கு முன் வரி வசூல் ஏதும் செய்யவில்லையா.. எப்படி ஒரு சாதாரண மருத்துவமனை ஊழியரின் கணக்கை முடக்கினர் என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இப்படியும் மோசடிகள் நடக்கிறதே… கேட்கிற இடத்தில் எல்லாம் ஆதார் கார்டு பான் கார்டு நகலை கொடுத்ததனால் வரும் ஆபத்தை பார்த்தீர்களா… உஷாராக இருங்கள் பொதுமக்களே…















