தமிழ்நாடு
ஈபிஎஸ் ஆதரவாளர் என்றாலே அடி உதைதான்: அதிமுக பிரமுகர்கள் கதறல்!
ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என்று கூறினாலே அடி உதை கிடைக்கிறது என ஈபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் கண்கலங்கி பேட்டியளித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வருகிறது என்பதும் ஒற்றை தலைமையை பிடிப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி தான் ஒற்றை தலைவராக வேண்டும் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்து வருவதாக தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் தொண்டர்கள் அதிக அளவில் ஓபிஎஸ் பக்கம்தான் இருப்பதால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று அதிமுகவின் ஈபிஎஸ் ஓபிஎஸ் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதாகவும் இதனால் ஈபிஎஸ் தொண்டர்கள் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக அதிமுகவின் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ரவுடிகளை அழைத்து வந்து ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என்று சொன்னாலே அடித்து உதைக்கிறார்கள் என்று ஒருவர் ஊடகத்தில் பேட்டி அளிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவின் ஒற்றை தலைம்ையை பிடிக்க ஈபிஎஸ் முடிவு செய்து விட்டாலும் ஓபிஎஸ் தொண்டர்கள் அவ்வளவு லேசில் அதை விட மாட்டார்கள் என்பதுதான் இந்த நிகழ்வு காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.