தமிழ்நாடு
நோட்டாவை விட குறைவான ஓட்டு வாங்குபவர் அண்ணாமலை: அமைச்சர் நாசர்
அண்ணாமலை நோட்டாவை விட குறைவான ஓட்டு வாங்குபவர் என்றும் அவர் ஓட்டுக்களை வாங்குவதற்காக என்ன பொய் வேண்டுமானாலும் சொல்வார் என்றும் அமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை திமுக மீதும் திமுக அமைச்சர்கள் மீதும் பல்வேறு ஊழல் புகார்களை கூறி வருகிறார். இந்த நிலையில் பால் பொருட்கள் விற்பனை தொடர்பாகவும் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு பால்வளத்துறை அமைச்சர் நாசர் பதில் அளித்துள்ளார்
பால் துறை ஒப்பந்தப் புள்ளியில் சேர்க்காத ஒரு பொருளை சேர்த்ததாக அண்ணாமலை பொய்யான தகவலை மக்களிடம் பரப்பி வருகிறார் என்றும் அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக எந்த பொய்யான தகவல் கூறுவார் என்றும் கூறினார்
ஒரு படித்த ஐபிஎஸ் ஆபிஸர் இவ்வாறு கூறுவது கேவலமான விஷயம் என்றும் போலீஸ் என்ற ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வார்த்தை இருக்கும் நிலையில் போலீசில் இருந்த அண்ணாமலை இவ்வாறு பேசுவது நல்லதல்ல என்றும் கூறினார்
தமிழக அரசு தயாரித்த பொருளை 77 கோடி கொடுத்து வாங்கியதாக அண்ணாமலை கூறியது அப்பட்டமான பொய் என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்தார். மேலும் நோட்டாவை குறைவான ஓட்டுகளை வாங்கும் அண்ணாமலை குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைக்கின்றார் என்றும் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடக்கும் நிலையில் பாஜக ஒருகாலும் காலூன்ற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்