Connect with us

தமிழ்நாடு

20 ஆண்டுகள் அரியர் வைத்திருப்பவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

Published

on

20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள பொறியியல் மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பினை தற்போது அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் ஒரு சிலர் பல ஆண்டுகளாக அரியர் வைத்து டிகிரியை முடிக்காமல் இருப்பது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் ஒரு சில குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின்னரும் அரியர் வைத்திருப்பவர்கள் டிகிரியை மறந்து விடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள பொறியியல் மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் மாதம் செமஸ்டர் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள செமஸ்டர் தேர்வுக்கு அரியர் வைத்துள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் www.coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் நீண்ட ஆண்டுகளாக அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்துடன் கூடுதலாக ரூபாய் 5000 செலுத்த வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பொறியாளராக தங்களை மாற்றிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?