சினிமா செய்திகள்
‘ஈஸ்வரன்’ ரிலீஸான நிலையில், இயக்குநர் சுசீந்திரன் வீட்டில் நடந்த சோகம்!
இயக்குநர் சுசீந்திரனின் தயார் இன்று காலமானார். நேற்று அவர் இயக்கிய ஈஸ்வரன் திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் இன்று காலை சோக சம்பவம் நடந்துள்ளது.
வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குநர் சுசீந்திரன். நடிகர் சிம்புவை வைத்து இவர் எடுத்த ஈஸ்வரன் திரைப்படம் நேற்று பொங்கலன்று ரிலீஸானது.
இந்த நிலையில், இயக்குநர் சுசீந்திரனின் தயார் ஜெயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலட்சுமி இன்று காலை 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஈஸ்வரன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இன்று இயக்குநரின் தாயார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிம்பு உள்ளிட்ட திரைபிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.