தமிழ்நாடு
கொடு, வாங்கு, பிடுங்கு, ரிப்பீட்டு: திமுக நலத்திட்ட உதவி நிகழ்ச்சியில் அரங்கேறிய நாடகம்!
திமுகாவின் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு கொடுத்த பையை மீண்டும் பிடுங்கி இன்னொரு பயனாளிக்கு கொடுத்த நாடகம் அரங்கேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று மக்களுக்கான அரசு திட்டங்களை வழங்கும் விழா நடைபெற்றது; திமுக பிரபலங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட இந்த விழாவில் 30 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் பைகள் வழங்கப்பட்டது .
இந்த நிலையில் பயனாளிகளிடம் கொடுத்த பைகளை திமுக பிரமுகர் பிடிங்கி, மீண்டும் அடுத்த பயனாளிக்கு கொடுப்பதற்காக முயற்சி செய்தார். கொடுத்த பொருளை பிடுங்கியதால் வாங்கிய பயனாளி அதிர்ச்சி அடைந்து மேடையிலிருந்து கீழே இறங்கிச் சென்றார்.
மூன்றே மூன்று பைகளை மட்டும் வைத்து அவற்றை கொடுத்தவரிடம் பிடுங்கி மாறி மாறி 30 பேருக்கு நலத்திட்ட உதவி கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.