Connect with us

தமிழ்நாடு

அப்பல்லோவில் டீ ரூ.350, இட்லி ரூ. 650: திவாகரன் அதிரடி பேட்டி!

Published

on

சமீபத்தில் ஜெயலலிதா சிகிச்சைக்கு ஆன செலவுகளை அப்பல்லோ நிர்வாகம் விசாரணை ஆணையத்தில் அறிக்கையாக தாக்கல் செய்தது. அதில் உணவு மற்றும் குடிநீர் செலவு 1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் இதனை கேலி செய்து மீம்ஸ்களாக வெளியிட்டனர்.

இந்நிலையில் இந்த உணவு மற்றும் குடிநீர் செலவு குறித்து கருத்து தெரிவித்திருந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா குடும்பம் பல அறைகளை வாடகைக்கு எடுத்துச் சாப்பிட்டதற்குதான் ஒன்றரை கோடி செலவு ஆனது என குற்றம் சாட்டினார். இதற்கு கோவையில் செய்தியாளர்களை சந்தித்த திவாகரன் பதில் அளித்துள்ளார்.

சசிகலா தரப்பினர் மட்டுமே அப்பல்லோவில் சாப்பிடவில்லை. சசிகலா குடும்பத்தில் என்ன ஒன்றரை லட்சம் பேரா இருக்கிறார்கள்? அமைச்சர்கள், அவர்களின் பிஏக்கள், அதிகாரிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பாதுகாவலர்கள் என பலரும் அப்பல்லோவில்தான் இருந்தனர். அவர்கள் சாப்பிட்டுவிட்டு கணக்கில்தான் கூறிவிட்டுவருவர். அப்பல்லோவில் டீக்கு ரூ.350, இட்லிக்கு ரூ. 650 என ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் போலத்தான் பில் போடுவார்கள்.

ஜெயலலிதா சிகிச்சை குறித்து விசாரிக்க அப்பல்லோவுக்கு வருகை தரும் அனைவருக்கும் அங்குதான் உணவு பரிமாறப்பட்டது. சசிகலா தரப்பினர் 10 பேர்தான் அப்பல்லோவில் இருந்திருப்பார்கள். மேலும் தான் சசிகலா குடும்பத்திலிருந்து வெளியேறிவிட்டதாகவும் திவாகரன் தெரிவித்துள்ளார்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?