சினிமா
பக்கத்து ஸ்டேட் தான.. தமிழ்லயே பேசுறேன்; ஐதராபாதில் அதகளம் பண்ண தனுஷ்!
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன், சமுத்திரகனி நடிப்பில் உருவாகி உள்ள வாத்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகிறது. நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் களைகட்டியது.
சென்னையில் வாத்தி ஆடியோ லாஞ்ச் நடைபெற்ற நிலையில், டிரைலர் லாஞ்சை ஐதராபாத்தில் வைத்து பைலிங்குவல் படத்தை சரிசமம் செய்துள்ளார் தனுஷ்.
கேப்டன் மில்லர் படத்தில் தாடி மீசையுடன் நடித்து வரும் தனுஷ், அதே கெட்டப்புடன் கோட் சூட் அணிந்து செம மாஸாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
நாயகி சம்யுக்தா மேனன் சேலையில் சும்மா கும்முன்னு வந்து ரசிகர்கள் கண்களை வெகுவாக கவர்ந்தார்.
இந்நிலையில், நிகழ்ச்சியில் பேசும் போது, தெலுங்கில் தனக்கு அதிகம் பேச வராது. சொன்னா புரிஞ்சிப்பேன். ஆங்கிலத்தில் பேசுவதற்கு பதில், நம்ம பக்கத்து ஸ்டேட் தான தமிழ்லயே பேசுறேனே என கேட்க, ரசிகர்களும் பேசுங்கள் என்றனர்.
கொஞ்ச நேரம் தனுஷ் தமிழில் பேசினார். ஆனால், ஒரு சில ரசிகர்களுக்கு புரியவில்லை என்பதற்காக ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். கடைசியில் மீண்டும் தமிழில் ரசிகர்கள் கோரிக்கைக்கு இணங்கி வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்ற “அமுல்பேபி.. இதுவரைக்கும் ரகுவரனை நீ வில்லனா தான பார்த்திருப்ப.. இனிமே ஹீரோவா பார்ப்ப” என பேச ரசிகர்கள் தலைவா என தனுஷை கொண்டாடி தீர்த்தனர்.