சினிமா செய்திகள்
அப்பா தான் என்னை கட்டாயப்படுத்தினார், அவர் மேல் எனக்கு பயங்கர கோபம்: தனுஷ்
அப்பாதான் என்னை கட்டாயப்படுத்தினார், அதனால் அவர் மீது எனக்கு செம கோபம் என தனுஷின் பழைய பேட்டி ஒன்று தற்போது திடீரென வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ் என்பதும் அவர் திடீரென சமீபத்தில் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முடிவை இருவரும் சேர்ந்து எடுத்தார்கள் என்றாலும் தனுஷ் இந்த முடிவை எடுத்ததற்கு பின்னணியில் அவரது குடும்பத்தினர் இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன.
இந்த நிலையில் தனுஷின் பழைய பேட்டி ஒன்று திடீரென வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் ’காதல் கொண்டேன்’ படத்தில் நடிக்கும்போது தனக்கு பல அவமானங்கள் ஏற்பட்டதாகவும் தான் ஹீரோ என்றவுடன் படக்குழுவினர்கள் உள்பட பலர் தன்னை கேலி கிண்டல் செய்து சிரித்ததாகவும் அப்போது தனக்கு நடிப்பில் விருப்பமில்லை என்றும் கல்லூரிக்குச் சென்று படிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்றும் ஆனால் என்னை எனது அப்பாதான் கட்டாயப்படுத்தி நடிக்க வந்தார் என்றும் அதனால் அவர் மீது எனக்கு பயங்கர கோபம் என்றும் கூறியுள்ளார் .
ஆனால் தற்போது எனது அப்பா எடுத்த முடிவு சரி என்பது எனக்கு தெரிய வந்துள்ளது என்பதும் நான் சினிமா துறையை தவிர வேறு எந்த துறையை தேர்வு செய்திருந்தாலும் இந்த அளவுக்கு முன்னேறி இருக்க மாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார், தனுஷின் பழைய பேட்டி தற்போது திடீரென ஏன் வைரலாகிறது என்பது புரியாமல் ரசிகர்கள் திகைப்பில் உள்ளனர்.