Connect with us

ஆரோக்கியம்

இதய ஆரோக்கியத்திற்கு கவசமாகச் செயல்படும் செம்பு நீர்! – ஆயுர்வேதமும் அறிவியலும் ஒப்புக்கொள்ளும் நன்மைகள்

Published

on

இதயத்திற்கு பாதுகாப்பாக செயல்படும் செம்பு நீர் – ஆரோக்கியத்திற்கான இயற்கை மருந்து!

ஆயுர்வேத பாரம்பரியத்தில் முக்கியமான இடம் பெற்றுள்ள செம்புப் பாத்திரத்தில் வைத்த நீர் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. குறிப்பாக, இதய ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

செம்பு பாத்திரத்தில் தண்ணீரை குறைந்தபட்சம் 8 முதல் 10 மணி நேரம் வைத்தால், அதில் நுண்ணிய செம்புத் துகள்கள் கரைந்து, அந்த தண்ணீரை உட்கொண்டால் அது உடலில் நுழைந்து நோய்களை எதிர்த்துப் போராடும் திறனை அளிக்கிறது. இதன் மூலம் உடல் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது.

இன்றைய காலத்தில் உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, மாரடைப்பு போன்ற இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாகி வருகின்றன. இதற்குப் போட்டியாக இயற்கையான ஒரு தீர்வாக செம்பு நீர் நமக்கு உதவுகிறது. இது கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை உயர்த்துவதோடு, இரத்தம் மற்றும் தமனிகளை சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

2012ல் அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகம் வெளியிட்ட ஆய்வில், செம்பில் வைக்கப்படும் தண்ணீர் ஈ.கோலை போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கக்கூடியதாக இருப்பது தெரியவந்தது. தாமிரத்தில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு (anti-oxidant) தன்மைகள் உள்ளன என்று விஞ்ஞானிகளும் உறுதிபடுத்தியுள்ளனர்.

மேலும், செம்பு நீர் செரிமானத்தை மேம்படுத்தி, கல்லீரல் மற்றும் சிறுநீரக நச்சுகளை நீக்குகிறது. மலச்சிக்கல், வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருகிறது. சருமத்தில் பளிச்சிடலையும் பஞ்சுபோன்ற மென்மையையும் தருகிறது. முகப்பரு, தோல் தொற்று மற்றும் தழும்புகளைப் போக்குகிறது.

இன்றைய மாசுபட்ட மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையில், செம்பு நீர் ஒரு இயற்கை டானிக் போல செயல்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதால், உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பை குறைத்து எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

பயன்படுத்தும் முறை:
காலை எழுந்ததும் வெறும் வயிற்றில், செம்புப் பாத்திரத்தில் இரவில் வைத்திருந்த தண்ணீரை குடிக்க வேண்டும். பாத்திரத்தில் பச்சைப் படலம் ஏற்படாமல் இருக்க, அவ்வப்போது எலுமிச்சை, உப்பு அல்லது புளி நீரால் சுத்தம் செய்ய வேண்டும்.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
emilio lejit. Jobs army jobs. The rbi grade b examination consists of three stages phase i, phase ii, and the interview, all conducted online..