தமிழ்நாடு
கழிவறையில் கல்லூரி மாணவில் தூக்கில் தொங்கி தற்கொலை!
கல்லூரி மாணவி ஒருவர் கழிவறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
கடலூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மாணவி ஒருவர் இன்று காலை திடீரென கழிவறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். கல்லூரியில் தற்போது தேர்வு நடைபெற்ற நிலையில் கடந்த சில நாட்களாக தேர்வு எழுதிய அந்த மாணவி தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்திருப்பதாக தெரிகிறது.
தற்கொலைக்கு முன் அந்த மாணவி எழுதிய கடிதத்தில் தேர்வில் தோல்வி அடைந்து விடுவேன் என்று பயம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.
கல்லூரி மாணவி ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாகவும் அந்த கல்லூரி வளாகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் மற்றும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கல்லூரி மாணவியின் மொபைல் போன் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.