Connect with us

உலகம்

கழிவறையில் உள்ளதைவிட 40,000 மடங்கு அதிக பாக்டீரியாக்கள்: வாட்டர் பாட்டில் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Published

on

கழிவறையில் உள்ள பாக்டீரியாக்களைவிட அதிக அளவு மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் வாட்டர் பாட்டிலில் இருப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த waterfilterguru.com என்ற குழுவின்ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு வாட்டர் பாட்டிலில் உள்ள பாக்டீரியாவை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் வாட்டர் பாட்டிலின் மூடிகள் மற்றும் உள்புறத்தில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை கண்டுபிடித்த போது பெரும் அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.

மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்தாமல் பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டிலில் ஏராளமான பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளது என்றும் குறிப்பாக கழிப்பறையில் இருக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கைகளை விட சுமார் 40 ஆயிரம் மடங்கு அதிகமான பாக்டீரியாக்கள் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனித வாயில் இருந்து பாக்டீரியாக்கள் வாட்டர் பாட்டிலின் மூடிக்கு செல்வதாகவும் அது அங்கேயே இனப்பெருக்கம் செய்து அதிக அளவு இருப்பதாகவும் எனவே மீண்டும் மீண்டும் ஒரு வாட்டர்பாட்டலை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது பெரும் ஆபத்து என்றும் ஆய்வறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் வாட்டர் பாட்டில்களில் அதிக எண்ணிக்கையிலான பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருந்தாலும் அது மனித உயிருக்கு ஆபத்தானது அல்ல என ரீடிங் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியாளர் டாக்டர் சைமன் கிளார்க் தெரிவித்துள்ளார். வாட்டர் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடித்து ஒருவர் நோய்வாய்ப்பட்டதாக நான் கேள்விப்பட்டதே இல்லை என்றும் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் வாட்டர் பாட்டிலை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமும் ஒரு முறையாவது வாட்டர் பாட்டிலை கழுவ வேண்டும் என்றும் வாரத்துக்கு ஒரு முறை சோப்பு போட்டு சூடான நீரில் சுத்தப்படுத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை பயன்படுத்தாமல் சில்வர், வெண்கலம், பித்தளை போன்ற உலோக பாட்டில்களை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு நலன் என்றும் கூறப்பட்டு வருகிறது.

author avatar
seithichurul
தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்12 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்16 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா16 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்16 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

சினிமா17 மணி நேரங்கள் ago

தனுஷின் ராயன்: ரசிகர்களுடன் கண்ணீர் மழை! 50வது பட வெற்றி விழா!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாம் ஒரு நாளைக்கு எத்தனை நிமிடங்கள் வரை பல் துலக்க வேண்டும் தெரியுமா?

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!