Connect with us

கிரிக்கெட்

சிஎஸ்கே அணிக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. காயத்தில் இருந்து மீண்ட முக்கிய வீரர்..!

Published

on

சிஎஸ்கே அணியின் முக்கிய பந்து பேச்சாளர்களில் ஒருவரான தீபக் சஹார் காயத்திலிருந்து முழுமையாக மீண்டும் விட்டதாகவும் வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்க தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

வரும் மார்ச் 30ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் அனைத்து அணிகளும் இந்த போட்டியில் விளையாட தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பந்துவிட்டாளர்களில் ஒருவர் தீபக் சஹார் என்பதும் தோனியின் நம்பிக்கைக்குரிய இவர் முதல் சில ஓவர்களில் விக்கெட்டை வீழ்த்தி எதிரணிகளை திணற வைப்பார் என்பதும் தெரிந்ததே.

deepak chahaar

ஆனால் கடந்த ஒரு ஆண்டாக இவ்வாறு காயம் காரணமாக கிரிக்கெட் விளையாடாத நிலையில் தற்போது அவர் முழுமையாக மீண்டுவிட்டதாக கூறியுள்ளார். தான் இரண்டு எலும்பு முறிவுகளை சந்தித்ததாகவும் தற்போது முழு குணமடைந்து போட்டியை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நான் ஒரு பேட்ஸ்மேன் ஆக இருந்திருந்தால் மிக எளிதில் மீண்டு வந்திருப்பேன் என்றும் ஆனால் நான் வேகப் பந்துவீச்சாளர் என்பதால் முழு தகுதி அடைய நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் அவர் ஒரு சில போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி இருக்கும் நிலையில் தற்போது ஐபிஎல் போட்டியில் தனது முழு திறமையையும் நிரூபித்து மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவேன் என்று தெரிவித்துள்ளார். இந்திய அணியில் தற்போது யார் நன்றாக விளையாடினாலும் எனக்கு கவலை இல்லை என்றும், ஐபில் போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் எனது 100% திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியில் எனது வாய்ப்புகளை பெறுவேன் என்றும் அவர் நம்பிக்கை உடன் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்ற அவர் 13 ஒருநாள் போட்டிகளிலும் 24 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்4 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?