கிரிக்கெட்
சிஎஸ்கே அணிக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. காயத்தில் இருந்து மீண்ட முக்கிய வீரர்..!
சிஎஸ்கே அணியின் முக்கிய பந்து பேச்சாளர்களில் ஒருவரான தீபக் சஹார் காயத்திலிருந்து முழுமையாக மீண்டும் விட்டதாகவும் வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்க தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
வரும் மார்ச் 30ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் அனைத்து அணிகளும் இந்த போட்டியில் விளையாட தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பந்துவிட்டாளர்களில் ஒருவர் தீபக் சஹார் என்பதும் தோனியின் நம்பிக்கைக்குரிய இவர் முதல் சில ஓவர்களில் விக்கெட்டை வீழ்த்தி எதிரணிகளை திணற வைப்பார் என்பதும் தெரிந்ததே.
ஆனால் கடந்த ஒரு ஆண்டாக இவ்வாறு காயம் காரணமாக கிரிக்கெட் விளையாடாத நிலையில் தற்போது அவர் முழுமையாக மீண்டுவிட்டதாக கூறியுள்ளார். தான் இரண்டு எலும்பு முறிவுகளை சந்தித்ததாகவும் தற்போது முழு குணமடைந்து போட்டியை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நான் ஒரு பேட்ஸ்மேன் ஆக இருந்திருந்தால் மிக எளிதில் மீண்டு வந்திருப்பேன் என்றும் ஆனால் நான் வேகப் பந்துவீச்சாளர் என்பதால் முழு தகுதி அடைய நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டில் அவர் ஒரு சில போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி இருக்கும் நிலையில் தற்போது ஐபிஎல் போட்டியில் தனது முழு திறமையையும் நிரூபித்து மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவேன் என்று தெரிவித்துள்ளார். இந்திய அணியில் தற்போது யார் நன்றாக விளையாடினாலும் எனக்கு கவலை இல்லை என்றும், ஐபில் போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் எனது 100% திறமையை வெளிப்படுத்தி இந்திய அணியில் எனது வாய்ப்புகளை பெறுவேன் என்றும் அவர் நம்பிக்கை உடன் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்ற அவர் 13 ஒருநாள் போட்டிகளிலும் 24 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.