இந்தியா
தாலி கட்டுவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன் மணப்பெண் செய்த காரியம்: அதிர்ச்சியில் மணமகன்!
தாலி கட்டுவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன் திடீரென மணப்பெண் செய்த காரியத்தால் மணமகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
கேரள மாநிலம் கொல்லம் என்ற பகுதியில் இளைஞர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து திருமண தினத்தன்று திருமண சடங்குகளும் நடைபெற்றது. மணமகன் மற்றும் மணமகள் அருகருகே நிற்க வைத்து மாலை மாற்றிக் கொள்ள சொன்ன போது திடீரென மணப்பெண் மாப்பிள்ளை போட வந்த மாலையை தடுத்து நிறுத்தினார்.
அதுமட்டுமின்றி அங்கிருந்து திடீரென ஓடி ஒரு அறையில் உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டார். மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் பல நிமிடங்கள் கதவை திறக்க சொல்லியும் மணமகள் கதவை திறக்கவில்லை. இதனையடுத்து காவல்துறையினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது .
காவல்துறையினர் விரைந்து வந்து மணமகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தான் ஒரு இளைஞரை உயிருக்குயிராக காதலித்ததாகவும், பெற்றோர்கள் கட்டாயத்தினால் தான் இந்த திருமணத்திற்கு சம்மதித்ததாகவும், இந்த திருமணத்தில் தனக்கு சிறிதும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிவித்தார்.
இதனை அடுத்து இரு வீட்டார்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி திருமணத்தை நிறுத்தினர். மணமகன் வீட்டாருக்கு மணமகள் வீட்டார் நஷ்ட ஈடு கொடுக்க ஒப்புக் கொண்டனர்.
ஆனால் அதே நேரத்தில் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால் முதலிலேயே சொல்ல வேண்டும் என்றும் ஒரு இளைஞரை மணமேடை வரை அழைத்து வந்து அசிங்க படுத்த கூடாது என்றும் மணப்பெண்ணுக்கு காவல்துறையினர் அறிவுரை கூறியுள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.