Connect with us

இந்தியா

காதலனுக்காக தேர்வு எழுதிய மாணவி.. ஆள்மாறாட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்!

Published

on

காதலனுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 24 வயது மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 24 வயது மாணவி ஒருவர் தனது காதலனுக்காக தேர்வு எழுத முடிவு செய்தார். தனது காதலன் தனது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சென்று இருந்த நிலையில் அவரது பிகாம் மூன்றாம் ஆண்டு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து எழுத முடிவு செய்தார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள வீர் நர்மது பல்கலைக்கழகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில் அந்த மாணவி காதலனுக்காக தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது சோதனை அதிகாரிகள் சோதனை செய்ததில் அவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து அந்த மாணவியை வெளியேற்றிய தேர்வு அலுவலர்கள் அவர் மீது காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த நிலையில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதால் அதிகபட்ச தண்டனை அவரது பட்டத்தை ரத்து செய்வதாகவும் என்று அதிகபட்ச தண்டனை அவருக்கு வழங்கப் பட்டால் அவர் ஏற்கனவே படித்து முடித்த டிகிரி ரத்து செய்யப்படுவதோடு அவர் மூன்று ஆண்டுகளுக்கு தேர்வு எழுதவும் தடை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

காதலனுக்காக அதிகபட்ச ரிஸ்க் எடுத்து ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய அந்த மாணவி தற்போது தன்னுடைய வாழ்க்கையையே தொலைத்து விட்டு நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது தவறு என்று தெரிந்தும் ஒரு மாணவி இந்த ரிஸ்க்கை காதலனுக்காக செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?