Connect with us

இந்தியா

மறுபடியும் முதல்ல இருந்தா? கோவிட் விதிமுறைகளை அமல்படுத்திய கர்நாடகா அரசு: முழு விபரங்கள்!

Published

on

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிய நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் கடும் துயரத்தில் இருந்தார்கள் என்பதும் தெரிந்ததே.

தற்போதுதான் ஒரு சில மாதங்கள் பொதுமக்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இன்றி சாலைகளில் நடந்து வரும் நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் நான்காவது அலை தோன்றும் என்ற அச்சம் காரணமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமான பயணிகள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு மாநில அரசுகள் விதிமுறைகளை வகுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இன்று சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கோவிட் தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனை குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் கர்நாடக மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பின்வருமாறு:

கர்நாடகாவில் உணவகங்கள், பப்கள், தியேட்டர் ஹால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்ற இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி.

கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் பொதுக்கூட்டங்களைத் தவிர்க்க வேண்டும்.

பள்ளிகளில் சானிடைசர்களைப் பயன்படுத்துவது, மாஸ்க் அணிவது, 2 டோஸ் தடுப்பூசி போடுவது ஆகியவை கட்டாயமாக்கப்படும்.

மூடப்பட்ட இடங்களிலும் குளிரூட்டப்பட்ட அறைகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம்.

வணிகம்19 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?