Connect with us

இந்தியா

ஆர்யன்கான் நிரபராதி: குற்றவாளிகள் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்

Published

on

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான், போதை பொருள் வழக்கில் சிக்கி இருந்த நிலையில் அவர் நிரபராதி என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பயில் உள்ள சொகுசு கப்பலுக்கு சென்ற ஷாருக்கான் மகன் ஆரியன்கான் போதை பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் ஒரு மாதம் சிறையில் இருந்த பின்னரே ஜாமீனில் வெளிவந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் போதை பொருள் தடுப்பு அதிகாரி ஒருதலைபட்சமாக விசாரணை செய்ததாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து விசாரணை செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கையில் கைது செய்யப்பட்ட ஆர்யன்கானிடம் இருந்து எந்த வித போதை பொருட்களும் இல்லை என்றும் அவருடைய செல்போனை வாங்கி பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் போதை பொருள் தடுப்பு பிரிவின் சோதனையை வீடியோ எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் இந்த வழக்கில் தனித்தனியாக பிடிபட்ட போதைப் பொருள்களை ஒரே நபரிடம் பெற்றது போல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் விசாரணை குழு கண்டறிந்துள்ளது.

இதனை அடுத்து குற்றப்பத்திரிக்கையில் போதை கடத்தல் தொடர்பான குற்றவாளிகள் பட்டியலிலிருந்து ஆர்யன்கான் பெயர் நீக்கப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் நிரபராதி என்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அமைத்த குழு தெரிவித்துள்ளது. இதனால் ஷாருக்கான் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?