Connect with us

இந்தியா

காஷ்மீர் தாய்மார்களுக்கு இந்திய ராணுவம் கோரிக்கை: இல்லையென்றால் சுட்டுக்கொல்வோம்!

Published

on

காஷ்மீர் மாநிலத்தில் உரிய அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் ராணுவத்திடம் சரணடைய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் கான்வால் ஜீத் சிங் தில்லான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 14-ஆம் தேதி பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து காஷ்மீரில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் கான்வால் ஜீத் சிங் தில்லான் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது காஷ்மீர் தாய்மார்களுக்கு அவர் சில வேண்டுகோள் விடுத்தார். புல்வாமா தாக்குதல் நடைபெற்ற 100 மணி நேரத்தில் அந்த தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயரங்கரவாதிகளை சுட்டுக் கொன்றுவிட்டோம். காஷ்மீரின் சமுதாய முன்னேற்றத்தில் தாய்மார்களின் பங்குதான் மிக முக்கியமானது.

நான் நேரடியாக காஷ்மீர் தாய்மார்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். உங்கள் வீட்டில் இருக்கும் இளைஞர்களிடம் வன்முறைப்பாதை வேண்டாம் என எடுத்து சொல்லுங்கள். அவர்களை வன்முறையை கைவிட்டுவிட்டு ராணுவத்திடம் சரணடைய சொல்லுங்கள். காஷ்மீரை அமைதியாக வைக்க தாய்மார்களால்தான் முடியும்.

காஷ்மீரில் அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருக்கும் அனைவரும் ராணுவத்திடம் சரணடைய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள். இது காஷ்மீரின் அனைத்து தாய்மார்களுக்கும் ராணுவம் விடுக்கும் செய்தியாகும் என லெப்டினன்ட் ஜெனரல் கான்வால் ஜீத் சிங் தில்லான் தெரிவித்தார்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?