தமிழ்நாடு
திமுக அமைச்சர்கள் கோபாலபுரத்தை கைகாட்டுகிறார்கள்: அண்ணாமலை அதிரடி பேச்சு
திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட போகிறோம் என்று அண்ணாமலை கூறியதும் பல திமுக அமைச்சர்கள் கோபாலபுரம் கூறியதால் தான் ஊழல் செய்ததாகவும் இதற்கெல்லாம் காரணம் கோபாலபுரம் குடும்பம் என்றும் கோபாலபுரத்தை நோக்கி கை காட்டுவதாக அண்ணாமலை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திமுகவின் இரண்டு அமைச்சர்கள் மீது இன்னும் இரண்டு நாட்களில் ஊழல் பட்டியல் வெளியிடப் போவதாகவும் அந்த பட்டியல் வெளியானால் அமைச்சர்களின் பதவி காலியாகும் என்று சமீபத்தில் அண்ணாமலை பேசினார். இதனால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் திமுக அமைச்சர்கள் தனக்கு தூது விடுவதாகவும், தாங்கள் செய்த ஊழல் தங்களுக்காக அல்ல என்றும் கோபாலபுரம் கட்டாயப்படுத்தியதால் தான் ஊழல் செய்தோம் என்றும் கூறி வருகிறார்கள் என்றும் அண்ணாமலை கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கோபாலபுரத்தில் உள்ள குடும்பம் தான் தற்போது முதலமைச்சரை ஆட்டிப்படைத்து வருவதாகவும் தற்போது முதல்வர் யார் என்று தெரியாத அளவில் முதல்வருக்குரிய பவர் அனைத்தும் கோபாலபுரம் குடும்பத்தில் இருப்பதாகவும் அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது