ஆரோக்கியம்
முடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் அற்புத நன்மைகள் தரும் நெல்லிக்காய் எண்ணெய்! வீட்டிலேயே எளிதாக தயாரிப்பது எப்படி?

முடி வளர்ச்சியை தூண்டவும், தலைமுடி ஆரோக்கியத்தை பராமரிக்கவும், எண்ணெய் தடவுவது அவசியம். அதிலும் குறிப்பாக நெல்லிக்காய் எண்ணெய் (ஆம்லா எண்ணெய்) தலைமுடிக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
நெல்லிக்காய் எண்ணெய் தலைமுடியின் அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாகும். இதை முறையாக பயன்படுத்தினால், பொடுகு, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் குறையும். நெல்லிக்காயில் அதிக அளவில் காணப்படும் வைட்டமின் ‘சி’, தலைமுடி வேர்களை வலுப்படுத்தி புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
முடி நீளமாகவும் மிருதுவாகவும் இருக்க நெல்லிக்காய் எண்ணெய் சிறந்ததாகும். நம் முன்னோர்கள் போல தலைக்கு எண்ணெய் தடவுவது வழக்கமாக இருந்தால், முடி ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் இருக்கும்.
🌼நெல்லிக்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை:
அரை கிலோ நெல்லிக்காயை நன்றாக கழுவி அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.
அதில் நெல்லிக்காய் சாறு சேர்த்து, ஈரப்பதம் போகும் வரை காய்ச்சவும்.
எண்ணெய் தணிந்ததும் வடிகட்டி குளிர்ந்த இடத்தில் சேமிக்கலாம்.
மற்றொரு வழி — நெல்லிக்காயை உலர்த்தி பொடியாக்கி, அதில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம்.
🌸நெல்லிக்காய் எண்ணெயின் முக்கிய நன்மைகள்:
முடி உதிர்தலை குறைக்கும்: வைட்டமின் சி தலைமுடி வேர்களை வலுப்படுத்துகிறது.
பொடுகை தடுக்கிறது: ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு தன்மைகள் உள்ளதால், பொடுகு பிரச்சனையை குறைக்கிறது.
பூஞ்சை தொற்றை தடுக்கிறது: தலைமுடி தோலை சுத்தமாக வைத்திருக்கும்.
முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது: சீராக மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் மேம்பட்டு முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
முடியை மிருதுவாகவும் பொலிவாகவும் மாற்றுகிறது.
தினமும் அல்லது வாரத்தில் 2 முறை ஆம்லா எண்ணெயை உச்சந்தலையில் மசாஜ் செய்தால், தலைமுடி வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாறும்.





















