சினிமா
’புஷ்பா’ படம் எப்படி இருக்கு? டுவிட்டர் பயனாளிகளின் விமர்சனங்கள்!
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சமந்தா நடிப்பில் உருவான ’புஷ்பா’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது என்பதும் 250 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக இன்று வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் இன்று வெளியாக உள்ளதை அடுத்து சமூக வலைதளங்கள் முழுவதுமே ’புஷ்பா’ குறித்த ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’புஷ்பா’ படம் நேற்று இரவு அமெரிக்காவில் முதல் காட்சி திரையிடப்பட்டதை அடுத்து அங்கு பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முழுக்க முழுக்க அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு சிறப்பான விருந்து என்றும் வித்தியாசமான நடிப்பு, அதிரடி ஆக்ஷன் காட்சிகள், இதுவரை யாரும் தொடாத செம்மரக் கடத்தல் சப்ஜெக்ட் ஆகியவை புதுமையானதாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் அதே நேரத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் கேரக்டர்கள் டம்மியாக இருப்பதாகவும் ஒரு சில காமெடி காட்சிகள் ஒர்க்அவுட் ஆகியுள்ளது என்றும் படத்தின் நீளம் மைனஸ் பாயிண்ட் ஆக உள்ளதாகவும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
சமந்தாவின் ஓ சொல்றியா ஓஓ சொல்றியா பாடல் இந்த படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் என்றும் இந்த படத்தின் வெற்றிக்கு இந்த ஒரு பாடல் மிகப்பெரிய காரணமாக இருக்கும் என்றும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் படத்தின் நீளம் மிக அதிகம் என்றும் கிளைமாக்ஸ் எதிர்பார்த்தவாறு இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொத்தத்தில் அல்லு அர்ஜுனின் ’புஷ்பா’ திரைப்படம் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்றும் நடுநிலை ரசிகர்களுக்கு ஆவரேஜ் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் விமர்சனங்களை எல்லாம் தாண்டி இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.