இந்தியா
ஏர் இந்தியா விமான விபத்து: கருப்புப் பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு செய்யப்படும் என உறுதி!

புதுடில்லி:
அமதாபாத்தில் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய, விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கருப்புப் பெட்டியில் இருக்கும் விமானியின் குரல் மற்றும் விமான தரவுகள் மூலம் விபத்துக்கான துல்லியமான தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
விபத்து நேரத்தில் விமானியின் குரல், விமானத்தின் செயல்பாடு உள்ளிட்ட பல தரவுகளை பதிவு செய்யும் கருப்புப் பெட்டி, அமதாபாத்தில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதிக்குத் தெற்கே உள்ள கட்டடத்தின் மேல்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், கருப்புப் பெட்டி வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு இந்த தகவலை முற்றிலும் நிராகரித்து, கீழ்காணும் விளக்கத்தை அளித்தார்:
“விமான விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி, இந்தியாவிலுள்ள விமான விபத்துகள் விசாரணை ஆணையத்திலேயே (AAIB) ஆய்வு செய்யப்படும். இது இந்திய அதிகார வரம்பிற்குள் நடைபெறும் விசாரணையாகும். வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் வெறும் வதந்திகளே.”
அவர் மேலும் கூறும்போது, கருப்புப் பெட்டி ஆய்வு என்பது மிகுந்த தொழில்நுட்பத் திறனை தேவைபடும் ஒரு செயல் என்பதைவும், இந்திய விமான விபத்து விசாரணை ஆணையம் (AAIB) அனைத்து தரவுகளையும் தீவிரமாக ஆய்வு செய்து, விபத்துக்கான காரணம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
















