Connect with us

இந்தியா

ஹிண்டர்பர்க் அறிக்கையால் எந்த பாதிப்பும் இல்லை.. முழுமையாக விண்ணப்பத்தை பெற்ற அதானி எஃப்பிஓ!

Published

on

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டர்பர்க் என்ற அமைப்பு அதானி குழுமம் மீது குற்றச்சாட்டு கூறிய நிலையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தின. இந்த நிலையில் 20 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எஃப்பிஓ முழுமையாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதால் அதானி நிறுவனத்துக்கு ஹிண்டர்பர்க் அறிக்கையால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டர்பர்க் அதானி நிறுவனங்களின் மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் காரணமாக பங்குச் சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்தது. அதானி நிறுவனத்தின் பங்குகள் சுமார் 20 முதல் 25 சதவீதம் சரிந்த நிலையில் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நிதியினை திரட்ட அதானி நிறுவனம் எஃப்பிஓ வெளியிட திட்டமிட்டு வெளியிட்டது.

சரியாக ஹீண்டர்பேக் நிறுவனத்தின் அறிக்கை வெளிவந்த இரண்டாவது நாளில் இந்த எஃப்பிஓ வெளியான நிலையில் ஹிண்டர்பெர்க் அறிக்கையால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் முழுமையாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதானி குழுமத்தின் எஃப்பிஓ 1.1 மடங்கு அதிகமாக விண்ணப்பத்தை பெற்றுள்ளதாகவும் ஹிண்டர்பெர்க் அறிக்கையால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை பட்ஜெட் வெளியாகும் நிலையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் மீண்டும் ஏற்றத்தில் இருக்கும் என்றும் முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அதானி எஃப்பிஓ தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து 1.26 மடங்கு விண்ணப்பத்தினை பெற்றுள்ளதாகவும், முதலீட்டாளர்களிடம் இருந்து 3.26% பங்கும், ஊழியர்கள் தரப்பில் 52% விண்ணப்பமும், சில்லறை முதலீட்டாளர்கள் பிரிவில் 11% விண்ணப்பத்தினையும் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

3112 – 3276 ரூபாய் என அதானி எஃப்பிஓ விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து சிறிதளவு குறைந்தாலும் விரைவில் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?