Connect with us

இந்தியா

எதற்கும் நான் பயப்பட மாட்டேன்: ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு!

Published

on

எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு பிறகு, முதன்முறையாக ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, “நான் எந்தவித மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன்; சிறையில் தள்ளினாலும் அச்சமில்லை” என ஆவேசமாக கூறினார்.

எம்.பி. பதவி பறிப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசினார் என குஜராத் மாநிலம், சூரத்தில் இருக்கும் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ராகுல் காந்தியின் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 4 வருடங்கள் கழிந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி, இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு வந்த அடுத்த நாளே (24 ஆம் தேதி) ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டுமின்றி, பேசுபொருளாகாவும் மாறியது.

பயப்பட மாட்டேன்

பதவி பறிப்புக்கு பின்னர் முதன்முறையாக நேற்று மதியம் டெல்லியில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் ஆவேசமாக, அதானி விவகாரத்தில் என்னுடைய பேச்சால் பிரதமர் மோடி பயந்து போனதால் தான், எனது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில், மத்திய அரசு பீதி அடைந்து, இதில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காகத் தான் இந்த பதவி பறிப்பு நாடகம் அரங்கேற்றப்பட்டு உள்ளது.

நாட்டு மக்களின் ஜனநாயக குரலைப் பாதுகாக்கவே நான் இருக்கிறேன். என்னைத் தகுதி நீக்கம் செய்வதனாலோ, மிரட்டுவதாலோ, சிறையில் அடைப்பதாலோ நான் நின்று விடுவேன் எனவும், அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன உறவு எனக் கேட்பதை நான் றிறுத்தி விடுவேன் எனவும் அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நான் நிறுத்த மாட்டேன். யாருக்கும் பயப்படவும் மாட்டேன். தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பேன் என ஆவேசமாக பேசினார். எனக்கு ஆதரவாக இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு நன்றி எனவும் தெரிவித்தார்.

author avatar
seithichurul
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்16 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்20 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா20 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்20 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

சினிமா21 மணி நேரங்கள் ago

தனுஷின் ராயன்: ரசிகர்களுடன் கண்ணீர் மழை! 50வது பட வெற்றி விழா!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!